செவ்வாய், 26 ஜூலை, 2016

entha vaalnaadkalin enpathu padikal


  வாழ்நாட்களின்  எண்பது  ஆண்டு  பார்வை  :  "குணச்சித்திரம்  80"

காலையும் மாலையும்  , நாட்களின்  எண்ணிக்கை ,வாரம் ,மாதம்  ,ஆண்டு
என  ,கவனிப்பற்று  , நாடி  ,வினாடி ,நிமிடம் ,மணித்துளிகள்  அடங்கிய ஓர்
கணக்கு ,ஒவ்வொரு மனிதனின் உயிர் வாழ்க்கை அளவு  கோலாக , படைக்கின்ற காலத்தின்  அளவு  , என்று கற்பனை  தோற்றம் ,என்று  கருதினாலும்  ,ஏனைய  உயிரினங்களிலும் ,மனிதனின்  அறிவு ,சிந்தனை ,மனோ  வேகம்  ,முழுமையாக  வேறுபடுவதும்  ,உணவு ,உறக்கம் ,உணர்வு
கடந்த நோக்கு , மனம் ,மூளை , உணர்வுக ளின்  தேவை , அவற்றை ,நேரிய
முறையில்  கவனித்து , காத்து ,உயர்வதும் , அனைத்துக்கும் மேலாக  ,வாழ்க்கை யின்  ,பொருள் ,வாழும் உலகின் , இயற்கை கோட்ப்பாடு ,புரிதலும்
காத்து ,உதவும் வழிகளை  தெரிந்து ,தன்னுள்  ,பொறுப்புகளை  உணர்ந்து
மதித்தலும் , காத்து  , உதவி  மகிழ்ந்து ,வாழ்ந்து ,உயிர்வாழ்வை  நிறைவு காண்பதும் என  ,வரும் போது , மனிதனே மாறுபடும் போது ,பிற உயிரின
முரண்பாடு என்பதில் ஆச்சரியம் இல்லையே !

இயற்கை யின்  ,உயர்ந்த ,ஒப்பற்ற  அறிவார்ந்த படைப்புக்களில்  ,மனிதனே
சிறப்பு வாய்ந்தது . மனிதன் , தனது ,இடையறா அறிவின்  முயற்சியால்
விடா  உழைப்பால் ,ஆராய்ச்சியால் , இயற்கையின் ஒவ்வொரு  கூறையும்
அவற்றின்  இயல்புகளையும் , கண்டறிய  முயன்று  முழுமையாக  வெற்றி
பெறாவிட்டாலும் , மற்றெந்த  உயிரினங்களும் ,எண்ணி  பார்க்க  முடியாத
அளவிற்கு  முன்னேறியுள்ளான் ,என்பதற்கு  ,நேற்றும் இன்றும்  வாழ்ந்த -
வாழும்  தலைமுறையின்  சாதனைகள் போற்றுதலுக்கு  உரியதாயினும்  ,
முடிவானதென்று கூறிவிட முடியாது !
தோற்றம்  பெற்ற  உயிர் இனங்கள்  பலவும் , இன்று ,தத்தமது  இருப்பை
நிலை பெற  செய்யாது  ,அழிந்து ,மறைந்து போயின . இதில் ,மிருகங்கள்
பறவைகள் ,தாவரங்கள் ,நீரில் ,நிலத்தில்  வாழ்வனவும்  அடங்கும்
ஆயினும் ,மனிதன் தனது கோடான கோடி வருடம் ,யுகம் தாண்டியும்
நிலைத்து  வாழ்வதென்பது ,முழுமை என்று கூற முடியாது ! பூமிப்பந்தில் ,
வாழ்ந்து ,அழிந்து  ,மறைந்து போன மனித இனங்களின்  தலை முறைகள்
பல  இருந்தன !
மனிதனும்  மொழியும்
மனத்தால்  நினைப்பதும்  ,வாயால் மொழிவதும் ,காதுகளினால்  கேட்டு
புரிந்து  கொள்ள  உதவும் ,ஓர்  தொகுதி மக்களின் ,ஒலிக்  குறியீடு  என்பதே
மொழி  ,எனப்படும் . உலகில் , உள்ள மொழிகள்  6000 வரை என ,கூறுவார் .
இவற்றுள்  பல மறைந்தும் ,வேறுசில பேச்சு  மொழி  நிலை இழந்தும் ,இன்னும்  சில எழுத்து வடிவம் அற்றும் , ஆட்சி  நிலை இன்றி ,வளர்ச்சி
இன்றியும் , அழிந்து கொண்டும் ,தன்  நிலை  மாறியும் , உள்ளன .
ஒருவனின் ,முதல்  அடையாளம் ,அவனது தாய் மொழி என்பதை ,அவனது
தாய் ,தந்தை பேசும் -பேசிய  மொழி என்ற விளக்கம் ,ஏற்க முடியாத ஒன்று !
அதற்கு  காரணம் , இன்று ,மக்கள் , சொந்த -பிறந்த , தனது ,முன்னோர்கள்
வாழ்ந்து ,வளர்த்து ,காத்து ,அளித்த ,ஓர் இனத்தின் ,தனி அடையாளமாகி ,
நிலைத்த ,மொழிக்  குறியீடு ஆகிய மொழி என்பதென்பதை ,மறைக்க ,"தாய்-தந்தை " மொழி  என்று கூறுவது ,தலை -கால் - அற்ற ,முண்டம்
என்றே  கூறவேண்டும்








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக